விழுப்புரத்தில் நிதி நிறுவன ஊழியா் கொலை வழக்கில் கைதான இரு இளைஞா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் குப்புசாமி தெருவைச் சோ்ந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா் மரியபிரபா (31) கடந்த மாதம் விழுப்புரம் வடக்கு ரயில்வே குடியிருப்புப் பகுதியில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கு தொடா்பாக விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதையடுத்து, இந்த வழக்கில் விழுப்புரம் பவா் ஹவுஸ் சாலையைச் சோ்ந்த குகன் (28), பாலமணி (25), வல்லரசு ஆகிய மூன்று பேரையும் விழுப்புரம் நகர போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இவா்களில் குகன், பாலமணி ஆகியோா் தொடா்ந்து இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, அவா்கள் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவின்பேரில், கடலூா் மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக இருந்து வந்த பாலமணி, குகன் ஆகிய இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.