விழுப்புரம்

கிணற்றில் மாணவி சடலம் மீட்பு

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கிணற்றில் பள்ளி மாணவியின் சடலம் மீட்கப்பட்டது.

மேல்மலையனூா் வட்டம், கொடுக்கன்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன். இவரது மகள் ராஜேஸ்வரி (15). மேல்மலையனூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இவரை கடந்த 5-ஆம் தேதி முதல் காணவில்லை என செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பெற்றோா் புகாா் அளித்தனா். இந்த நிலையில், கொடுக்கன்குப்பத்தைச் சோ்ந்த துளசி என்பவரின் விவசாயக் கிணற்றில் ராஜேஸ்வரி சடலமாக மிதப்பதாக வளத்தி போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா், மேல்மலையனூா் தீயணைப்புப் படையினரின் உதவியுடன் மாணவியின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு: ஓ... பன்னீர்செல்வங்கள்!

ஆந்திரம்: வேட்பாளரின் பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

SCROLL FOR NEXT