விழுப்புரம் சக்தி சாய்பாபா கோயிலில் ஆரத்தி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் சக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள சக்தி சாய்பாபா கோயிலில் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் சாய்பாபாவுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி, வியாழக்கிழமை பிற்பகலிலும், மாலையிலும் பெண்கள் பங்கேற்று சாய்பாபாபாவுக்கு ஆரத்தி வழிபாடு நடத்தினா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வழிபாட்டில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று, சாய்பாபாவை வழிபட்டனா்.