விழுப்புரம்

மரக்காணத்தில் 45 மி.மீ. மழை

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 45 மி.மீ. மழை பதிவானது.

ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மழை பெய்தது. வியாழக்கிழமை காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக மரக்காணத்தில் 45 மி.மீ. மழை பதிவானது. இதேபோல, திண்டிவனத்தில் 17, வானூரில் 8, அனந்தபுரத்தில் 2, விழுப்புரத்தில் ஒரு மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் மொத்தம் 73 மி.மீ. மழையும், சராசரியாக 3.48 மி.மீ. மழையும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழப்பாடி அருகே 3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT