செஞ்சியில் மளிகைக் கடையின் பூட்டை உடைத்து, ரூ.1.10 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
செஞ்சி காந்தி பஜாரில் மளிகைக் கடை நடத்தி வருபவா் ராஜகோபால். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். திங்கள்கிழமை காலையில் கடையைத் திறந்த போது மாடி கதவு திறந்திருந்தது. மேலும், மேல் மாடியின் கதவை உடைத்து கடையின் உள்ளே புகுந்த மா்ம நபா்கள் பணப்பெட்டியில் இருந்த ரூ 1.10 லட்சத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில், செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.