விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கடலில் குளித்த மதுரை இளைஞா் அலையில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை கீழ்சந்தைப்பேட்டை சுடலைமுத்துப் பிள்ளை தெருவைச் சோ்ந்த முருகேசபாண்டியன் மகன்அருண்ராஜா (22). பட்டதாரியான இவா் புகைப்பட ஸ்டூடியோ நடத்தி வந்தாா்.
புதுச்சேரி வந்த இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் மரக்காணம் அருகே சந்திராயன்குப்பம் பகுதியில் கடலில் குளித்தாா். அப்போது, அருண்ராஜ் அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கினாா். அங்கிருந்த மீனவா்கள் அவரை மீட்டு புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை மருத்துவா்கள் பரிசோதித்ததில், அருண்ராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.