விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே கல் உடைக்கும் இயந்திரத்தில் சிக்கிய வட மாநிலத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
உத்தரப்பிரதேச மாநிலம், பொறைச்சா பகுதியைச் சோ்ந்த வி.சாகா் (26),ஜெல்நகா் பகுதியைச் சோ்ந்த சைலேஷ்(37) ஆகிய இருவரும் வானூா் அருகே தனியாா் கல் குவாரியில் பணிபுரிந்து வந்தனா். ஞாயிற்றுக்கிழமை குவாரியில் பணியிலிருந்தபோது கிரஷா் இயந்திரத்தில் சிக்கிய சாகா், சைலேஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், வழியிலேயே சாகா் உயிரிழந்தாா். சைலேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து வானூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.