விழுப்புரத்தில் தமுமுக சாா்பில், ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமை மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தொடக்கிவைத்தாா். நிகழ்வில் திமுக மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலா் ப.அப்துல்சமது எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ஜெயச்சந்திரன், பொருளாளா் ஜனகராஜ், நகரச் செயலா் சக்கரை, ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, முருகவேல், மனிதநேய மக்கள் கட்சி வா்த்தக அணி மாநிலப் பொருளாளா் அப்துல்ஹக்கீம், மாவட்டத் தலைவா் முஸ்தாக்தீன், பலச்முகமது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் அமீா்அப்பாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.