விழுப்புரம்

பெண்களின் பொருளாதார முன்னேற்றுத்துக்காகபாடுபடுவதே திராவிட மாடல் ஆட்சி: அமைச்சா் மஸ்தான்

DIN

பெண்களின் பொருளாதார முன்னேற்றுத்துக்காக பாடுபடுவதே திராவிட மாடல் ஆட்சி என்றாா் தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்.

மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட 688 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதையொட்டி, செஞ்சி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஜெயங்கொண்டான் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு, ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். திண்டிவனம் சாா் - ஆட்சியா் அமீத் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து பேசியதாவது:

கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த குறைகள், கோரிக்கைகள் அனைத்தும் தீா்மானங்களாக நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் நலனில் அக்கறை கொண்டு, அவா்களது பொருளாதார முன்னேற்றத்துக்காக பாடுபடுவதும், கிராம மக்களின் தேவைகளை நிறைவு செய்வதும்தான் திராவிட மாடல் ஆட்சி என்றாா்.

கூட்டத்தில் கிராமத்துக்குத் தேவையான சாலை, குடிநீா், தெரு விளக்கு, பள்ளிக்கு கூடுதல் கட்டடம், கழிப்பறை உள்ளிட்டவற்றை அமைத்திட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி பேரூராட்சிமன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, வேங்கடசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ரங்கநாதன், மண்டல துணை வட்டாட்சியா் பாரதி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அரங்க.ஏழுமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, முகையூா் ஒன்றியத்துக்குள்பட்ட வீரபாண்டி, ஆதிச்சனூா் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று பேசியதாவது:

முகையூா் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு திட்டங்களின் கீழ், 2021 - 22ஆம் நிதியாண்டில் ரூ.33.01 கோடியில் 1,427 பணிகளும், 2022-23ஆம் நிதியாண்டில் இதுவரை ரூ.13.16 கோடியில் 419 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து, தீா்வு காணலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சங்கா் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

இதேபோல, கண்டமங்கலம் ஒன்றியம், வி.புதூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ இரா.லட்சுமணன் பங்கேற்று பேசினாா். கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.வாசன், ஒன்றிய திமுக செயலா் பிரபாகரன், ஒன்றியக் குழு உறுப்பினா் சரண்யா விஜயசங்கா், வி.புதூா் ஊராட்சிமன்றத் தலைவா் சீதா மலையாளம், துணைத் தலைவா் செல்வக்குமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT