விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் சே.அய்யனாா் (36). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.
இந்த நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக அய்யனாா் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.