விழுப்புரம்

வளச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் அலுவலா்களுக்கு கூடுதல் கவனம் தேவை : அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான்

DIN

வளா்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றும்போது அலுவலா்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வருவாய் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் பேசியதாவது:

திண்டிவனம் வருவாய்க் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சிறு பாலங்களின் கட்டுமானப் பணிகள், சாலைகள் சீரமைப்பு, மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட வேண்டும். திண்டிவனம் நகராட்சியில் வசிக்கும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கட்டப்படவுள்ள சமுதாயக் கூடத்துக்கான இடத்தை உடனடியாக அதிகாரிகள் தோ்வு செய்யவேண்டும்.

குடியிருப்புப் பகுதிகளில் மழைநீா் தேங்காத வகையில் நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றும்போது துறை சாா்ந்த அலுவலா்கள் அந்தப் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணிகள் தரமிக்கதாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா் அமைச்சா்.

கூட்டத்தில் சாா்-ஆட்சியா் கட்டா ரவி தேஜா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

வலு இல்லாத வழக்குகள், பல் இல்லாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT