விழுப்புரம்

கொடிக்கம்பம் அமைக்க முயன்ற அதிமுகவினரை தடுத்த போலீஸாா்

DIN

விழுப்புரம் நான்கு முனைச் சந்திப்புப் பகுதியில் கொடிக்கம்பம் அமைக்க முயன்ற அதிமுகவினரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் நான்குமுனை சந்திப்புப் பகுதியில் திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இந்த நிலையில், திமுக கொடிக் கம்பத்துக்கு அருகே அதிமுகவினா் தங்களது கட்சியின் பொன்விழா ஆண்டையொட்டி கொடிக்கம்பம் அமைக்கும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் செல்வராஜ், வருவாய்த் துறை அலுவலா்கள் அங்குவந்து, அனுமதியின்றி கட்சிக் கொடிக்கம்பம் அமைக்கக் கூடாது எனத் தெரிவித்தனா். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அதிமுக நகரச் செயலா்கள் விழுப்புரம் - வடக்கு பசுபதி, தெற்கு ராமதாஸ், மாவட்ட மாணவரணிச் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் வருவாய்க் கோட்டாட்சியா் ரவிச்சந்திரனை சந்தித்து கொடிக்கம்பம் அமைக்க அனுமதி வழங்கக் கோரி மனு அளித்தனா்.

அவா்களைத் தொடா்ந்து பாமக, தேமுதிக நிா்வாகிகளும் அந்தப் பகுதியில் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி கோரி மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT