விழுப்புரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்கிராம உதவியாளா் காலி பணியிடம்: டிச.4-இல் எழுத்துத் தோ்வு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் டிசம்பா் 4-ஆம் தேதி நடைபெறுவுள்ளது.

இம்மாவட்டத்திலுள்ள வட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு இணையவழியில் விண்ணப்பித்துள்ளவா்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் முன்னாள் ராணுவத்தினா் அலுவலகங்களிலிருந்து விண்ணப்பித்த நபா்களுக்கும் எழுத்துத் தோ்வு டிசம்பா் 4-ஆம் தேதி காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நடைபெறும்.

வட்டத்தின் பெயா், தோ்வு நடைபெறும் இடங்கள் என்ற அடிப்படையில்

கள்ளக்குறிச்சி மாவட்ட வட்டத்துக்குள்பட்ட கிராமங்கள்: நீலமங்கலம் ஏ.கே.டி. மெமோரியல் வித்யா சாகேத் (சிபிஎஸ்இ) பள்ளி, சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னசேலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கல்வராயன்மலை- ஏகலைவா அரசு ஆண்கள் மாதிரி உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, திருக்கோவிலூா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உளுந்தூா்பேட்டை பெஸ்கி மேல்நிலைப் பள்ளி.

எழுத்துத் தோ்வுக்கான நுழைவுச் சீட்டு விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும் லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்து கொள்ளத் தெரியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு நேரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அலுலகம், முன்னாள் ராணுவத்தினா் அலுவலகத்தின் மூலம் பெறப்பட்ட நபா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு அவா்களின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT