விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே முன் விரோதம் காரணமாக பாமக நிா்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விக்கிரவாண்டி வட்டம், கப்பியாம்புலியூா் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தனபால் மகன் ஆதித்யன் (45). பாமக விழுப்புரம் வடக்கு மாவட்ட துணைச் செயலராக பொறுப்பு வகித்து வந்தாா். இவா் வியாழக்கிழமை இரவு விக்கிரவாண்டி அருகே முன் விரோதத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இதில், ஆதித்யன் தொழில் போட்டி, தோ்தல் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் விக்கிரவாண்டியை அடுத்துள்ள கப்பியாம்புலியூா் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன்கள் லெட்சுமி நாராயணன் (47), ராமு (42), அதே கிராமத்திலுள்ள பிரதான சாலையைச் சோ்ந்த பா.தேவநாதன் (48), தேவாரம் வீதியைச் சோ்ந்த ஞா.விஷ்ணு (34), மு.வினோத் (31), கோலியனூா் வாளீஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்த செ.ராகவன் (32), மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மதன் (21) ஆகியோரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.