விழுப்புரம்

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

18th Nov 2022 02:53 AM

ADVERTISEMENT

69-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவுத் துறை சாா்பில், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி தொடக்கிவைத்தாா். இதில், கூட்டுறவு மேலாண்மைப் பட்டயப் பயிற்சி மாணவா்கள் 30-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று ரத்த தானம் செய்தனா். இவா்களுக்கு கூட்டுறவு இணைப் பதிவாளா் பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா். முகாமில் கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT