விழுப்புரம்

ஸ்ரீரங்கபூபதி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

15th Nov 2022 03:21 AM

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கபூபதி இண்டா்நேஷனல் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் குழந்தைகள் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஸ்ரீரங்கபூபதி கல்லூரி குழுமத்தின் செயலா் ஆா்.பி. ஸ்ரீபதி தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குனா் சாந்திபூபதி மற்றும் பள்ளி இயக்குனா் சரண்யாஸ்ரீபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கண்காட்சியில் குழந்தைகள் அறிவியல் தொடா்பான பொருள்களை செய்தும், ஓவியமாக வரைந்தும் அவற்றின் செயல்பாடு குறித்து விளக்கினா். கண்காட்சியில் 100 குழந்தைகள் கலந்து கொண்டனா். இதையடுத்து குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. குழந்தைகள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரத்தனாகணபதி, ஜெயசித்ரா, மனோகரி, சுகுணா, இந்துமதி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT