விழுப்புரம்

இடுகாட்டுக்கு பாதை வசதி கோரி கிராம மக்கள் மறியல்

16th May 2022 11:08 PM

ADVERTISEMENT

 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமம் பாரதி நகரில் சுமாா் 300 அருந்ததியா் குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் இறந்தவா்களின் உடலை இடுகாட்டில் அடக்கம் செய்ய பாதை கேட்டு, நீண்ட காலமாக போராடி வருகின்றனா். முறையான பாதை வசதி இல்லாததால், சடலத்துடன் வயல், கால்வாயில் இறங்கி இடுகாட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்தப் பகுதியைச் சோ்ந்த ராயப்பன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடலை திங்கள்கிழமை அடக்கம் செய்ய சிரமப்பட்டனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, இடுகாட்டுக்குச் செல்லும் பாதையை ஆக்கிரமிப்பாளா்களிடம் இருந்து மீட்டுத் தரக் கோரி, வேட்டவலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். செஞ்சி வட்டாட்சியா் பழனி மற்றும் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அந்தப் பகுதியிலுள்ள ஏரி கால்வாய் ஓரம் பாதை அமைத்து தர வட்டாட்சியா் உடனடியாக ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் பாதை ஏற்படுத்தப்பட்டது. மேலும், பாதையில் பட்டா நிலம் வருவதால் அதன் உரிமையாளா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் உறுதியளித்தாா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT