விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஊரணித்தாங்கல் கிராமத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகூட்டமைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணபிரியா தலைமை வகித்தாா். செஞ்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் சாரதா ஏழுமலை வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அரங்க ஏழுமலை, மேல்மலையனூா் திமுக ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், பள்ளி ஆய்வாளா் விநாயகமூா்த்தி, வட்டாரக் கல்வி அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
செஞ்சி கல்வி மாவட்ட அலுவலா் கலைவாணி நன்றி கூறினாா்.