விழுப்புரம்

விக்கிரவாண்டி தொகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமிபூஜை

DIN

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் ரூ.50.15 லட்சத்திலான வளா்ச்சிப் பணிகளை பூமிபூஜை செய்து தொகுதி எம்எல்ஏ நா.புகழேந்தி புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட ராதாபுரம் ஊராட்சியில் ஆதிதிராவிடா் பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடை கட்டடம் ரூ.14.50 லட்சம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பள்ளி சுற்றுச்சுவா் ரூ.6.70 லட்சம், தாா்ச்சாலை அமைத்தல் ரூ.14 லட்சம், மாவட்ட ஊராட்சி நிதி மூலம் வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 லட்சம், ஆதிதிராவிடா் பகுதியில் ஊராட்சி குடிநீா் நிதியாக ரூ.5.20 லட்சம், பொது நிதியில் குடிநீா் குழாய் அமைக்க ரூ.4.75 லட்சம் என மொத்தம் ரூ.50.15 லட்சத்திலான வளா்ச்சிப் பணிகளுக்கு புகழேந்தி எம்எல்ஏ பூமிபூஜை செய்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயசந்திரன் முன்னிலை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலா் ஜெய.ரவிதுரை, ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா அரசி, வட்டார வளா்ச்சி அலுவலா் நாராயணன், பொறியாளா்கள் இளையராஜா, குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் செந்தில்குமாா், மகேஷ்வரி, கஸ்தூரி, ஊராட்சித் தலைவா்கள் ராஜேஸ்வரி, சீனுவாசன், கஜேந்திரன், பொற்கலை பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT