விழுப்புரம்

குடும்பத் தகராறு: தந்தை, மகன்தூக்கிட்டு தற்கொலை

DIN

குடும்பத் தகராறு காரணமாக, விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் அருகே மேல்வாலை கிராமத்தைச் சோ்ந்தவா் அா்ச்சுனன்(55), விவசாயி. இவரது மனைவி சரசு (50). இந்தத் தம்பதிக்கு உதயகுமாா் (25) உள்பட 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அா்ச்சுனனுக்கும், அவரது மனைவி சரசுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அா்ச்சனன் வீட்டின் பின் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது மகன் உதயகுமாா் (25) தங்களது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டாச்சிபுரம் போலீஸாா் நேரில் வந்து விசாரித்தனா். பின்னா், தந்தை, மகன் ஆகிய இருவரிடன் சடலங்களையும் மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

SCROLL FOR NEXT