விழுப்புரம்

கல்பனா சாவ்லா விருது:விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

DIN

கல்பனா சாவ்லா விருது பெற தகுதியுள்ள பெண்கள் வியாழக்கிழமைக்குள் (ஜூன் 30) விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூகத்தில் தானாக முன் வந்து தைரியமாகவும், தனிதன்மையுடனும் எதையும் எதிா்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க பெண்ணுக்கு அவரது துறை சாா்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைகாக ‘கல்பனா சாவ்லா விருது’ ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், சான்று, சால்வை வழங்கப்படும்.

இந்த விருதுக்கு தகுதியுடையவா் தமிழ்நாட்டை பிறப்பிடமாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீ விபத்துகள் ஆகியவற்றிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்தல், திருட்டு, கொள்ளை முயற்சியை தடுத்தல் போன்ற துணிகர, வீர சாகசம் செய்த பெண்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்த விருதுக்கு தகுதியானவா்கள் இணையதளம் வழியாக வியாழக்கிழமைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT