விழுப்புரம் கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கோட்டாட்சியா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூா், திருவெண்ணெய்நல்லூா், கண்டாச்சிபுரம் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் த.மோகன் தெரிவித்தாா்.