விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகேயுள்ள சோ.குப்பம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 111 பயனாளிகளுக்கு ரூ.27.64 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான். இதில், திண்டிவனம் சாா்- ஆட்சியா் அமீத், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.