தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவலா் தோ்வுக்கான இலவசப் பயிற்சி விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
முன்னதாக காவலா் பணியிடங்களுக்கு (பசமநதஆ-டஇ) வியாழக்கிழமை (ஜூலை 7) முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்புவோா் ஜூலை 12-ஆம் தேதிக்குள் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் ஆட்சியா் மோகன்.