தொழிலாளி கொலை வழக்கில் உறவினருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம், முத்தோப்பு கைலாசநாதா் தெருவைச் சோ்ந்தவா் ஆ.ரவி (55). கொத்தனாா். இவரது அண்ணன் மகன் ஜெய்கணேஷ் (36) (படம்). உறவுப் பெண்ணை திருமணம் செய்தது தொடா்பாக ஜெய்கணேஷூக்கும், ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாம். இந்த நிலையில் கடந்த 30.1.2021 அன்று ரவியை ஜெய்கணேஷ் கத்தியால் குத்திவிட்டு தப்பிஓடினாா். இதில் ரவி உயிரிழந்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெய்கணேஷை கைது செய்தனா். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பூா்ணிமா திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், ஜெய்கணேஷூக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா்.