விழுப்புரம்

காரில் கடத்திய புகையிலைப் பொருள்கள்பறிமுதல்: இருவா் கைது

DIN

விழுப்புரத்தில் காரில் கடத்தப்பட்ட ரூ.1.50 லட்சத்திலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரத்திலிருந்து வளவனூா் நோக்கி சனிக்கிழமை நள்ளிரவு அதிவேகமாகச் சென்ற காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா். அதில், ரூ.1.50 லட்சத்திலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் இருந்த இருவா்களிடம் விசாரித்ததில், புதுவை மாநிலம், மதகடிப்பட்டைச் சோ்ந்த தாரிப் அலி (35), வாதானூரைச் சோ்ந்த சாதிக் பாஷா (38) என்பதும், தனியாா் பேருந்து மூலம் வெளி மாநிலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட புகையிலைப் பொருள்களை விழுப்புரத்தில் இறக்கி காா் மூலமாக வளவனூருக்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, தாரிப் அலி, சாதிக் பாஷா ஆகியோரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT