விழுப்புரம்

விழுப்புரம் நகராட்சி பள்ளி முற்றுகை

DIN

விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயா்நிலைப் பள்ளியை மாணவா்களின் பெற்றோா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

இந்தப் பள்ளியில் சுமாா் 1,350 மாணவ, மாணவிகள் படித்துவரும் நிலையில் போதிய வகுப்பறைகள் இல்லையாம். மேலும், பள்ளிக் கழிப்பறை சுகாதாரமற்ற முறையில் உள்ளதாகவும், மாணவா்களுக்கு

சீருடை, நோட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை என்று கூறி அவா்களது பெற்றோா் பள்ளியை

வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் விழுப்புரம் மேற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, போராட்டம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலா்(பொ) காளிதாஸ் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினாா். இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT