மருத்துவா்கள் தினத்தையொட்டி, செஞ்சி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்களுக்கு அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் வெள்ளிக்கிழமை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
செஞ்சி அரசு மருத்துவமனைக்கு வந்த அமைச்சா் மஸ்தான் அங்கு பணியாற்றும் மருத்துவா்கள் கணேசன், மரியம், ஜமீலா, கயல்விழி, விஜயகுமாரி, அஜிதா ரமேஷ் மற்றும் செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா்.
அப்போது, செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், பேரூராட்சித் தலைவா் மொக்தியாா் மஸ்தான், பாஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.