விழுப்புரம் அருகே குடும்பப் பிரச்னையால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் அருகே கண்டமானடி கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (26). விவசாயி. இவரது மனைவி அம்பிகா (23). இந்தத் தம்பதிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகின்றன. குழந்தை இல்லை. இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
வழக்கம்போல, வியாழக்கிழமையும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த அம்பிகா வீட்டில் மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அருகிலிந்தவா்கள் உடனடியாக வந்து தீயை அணைத்து தீக்காயங்களுடன் அம்பிகாவை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அவா் அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், அம்பிகா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாா் எனத் தெரிவித்தாா்.
இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.