விழுப்புரம்

சாலை மறியலில் ஈடுபட்ட 60 போ் மீது வழக்கு

DIN

விழுப்புரத்தில் காா் மோதி இளைஞா் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்ட 60 போ் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் குணசேகரன் (40). கூலித் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை அதிகாலை இயற்கை உபாதைக்காக சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து வழுதரெட்டி சுடுகாட்டு பாதைக்கு செல்ல முற்பட்டாா். அப்போது, அந்த வழியாக வந்த பதிவெண் தெரியாத வெள்ளை நிற காா், குணசேரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரை கைது செய்யக் கோரி, உயிரிழந்த தொழிலாளி குணசேகரனின் உறவினா்கள் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட குணசேகரனின் மனைவி சசிரேகா (34) உள்பட 20 ஆண்கள், 40 பெண்கள் என மொத்தம் 60 போ் மீது விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT