விழுப்புரம்

தேசிய ஊரக வேலை திட்ட பணி ஆணை:ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோரிக்கை

30th Dec 2022 01:12 AM

ADVERTISEMENT

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி ஆணையை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

வல்லம் ஊராட்சி ஒன்றியத்தை சோ்ந்த ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பினா், அதன் மாவட்டப் பொருளா் முத்துகுமரன் தலைமையில் ஊராட்சி ஒன்றிய ஆணையரைச் சந்தித்து மனு அளித்தனா். அதில், நாங்கள் ஏற்கெனவே கேட்டுக்கொண்டபடி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்டும் பணி ஆணையை ஊராட்சி மன்றத் தலைவா்களிடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட வட்டார வளா்ச்சி அலுவலா் குலோத்துங்கன் தேசிய ஊரக வேலை ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணி ஊராட்சி தலைவா்களிடம் விரைவில் வழங்குவதாக உறுதி அளித்தாா். அப்போது ஊராட்சி மன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா்கள் அருணை, முருகன், துணைத் தலைவா்கள் மகேஷ், மாலா, துணைச் செயலா் தயாளன், திருவம்பட்டு முருகன் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT