விழுப்புரம் அருகே பாஜக பிரமுகா் வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விழுப்புரம் அருகேயுள்ள முண்டியம்பாக்கத்தைச் சோ்ந்தவா் நா.ரவி (55). பாஜக ஓபிசி அணியின் மாநிலச் செயற்குழு உறுப்பினராக உள்ளாா்.
முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி வளா்மதி ராதாபுரம் அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா்.
இவா்கள் புதன்கிழமை காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், அங்கிருந்த 4 பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றனா்.
தகவலறிந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என். ஸ்ரீநாதா, துணைக் கண்காணிப்பாளா் பாா்த்திபன், ஆய்வாளா் விநாயகமுருகன் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
மோப்ப நாய் சோதனையும் நடைபெற்றது. தடயவியல் துறை கூடுதல் எஸ்.பி. சோமசுந்தரம் வீட்டில் பதிவான விரல்ரேகைகளைப் பதிவு செய்தாா். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.