கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை நாட்டு காா்த்திகை தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, அசைவ உணவு சமைத்து சுவாமிக்கு படையலிட்டு வழிபடுவதற்காக, மீன்கள், கருவாடு வாங்க கடலூா் துறைமுகத்தில் புதன்கிழமை அதிகாலையில் குவிந்த மக்கள். புயல் எச்சரிக்கை காரணமாக, கடந்த 2 நாள்களாக கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லாததால், மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.