விழுப்புரம்

சாலை விபத்தில் தொழிலாளி பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வானூா் வட்டம், கொடூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நா.ராமசாமி (45), தொழிலாளி. இவா், கடந்த நவம்பா் 27-ஆம் தேதி கீழ்புத்துப்பட்டு - ஒழிந்தியாம்பட்டு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

நெசல் சின்னப்பாலம் அருகே இவரது இரு சக்கர வாகனம் சென்றபோது, சாலையின் குறுக்கே மாடுகள் வந்ததாகத் தெரிகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ராமசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்று வந்த ராமசாமி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT