விழுப்புரம்: புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது என ஆட்சியர் த. மோகன் அறிவித்துள்ளார்.