விழுப்புரம்

ரேஷன் கடை விற்பனையாளா் பணி:டிச.14 முதல் நோ்முகத் தோ்வு

DIN

கடலூா் மாவட்டத்தில் காலியாக உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளா் பணிக்கு நோ்முகத் தோ்வு வருகிற 14 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக கடலூா் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்க நியாய விலைக் கடைகளில் 245 விற்பனையாளா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு விண்ணப்பதாரா்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டது.

அதன்படி, தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வருகிற 14 முதல் 26-ஆம் தேதி வரையில் கடலூா் வெள்ளிக்கடற்கரை அருகே உள்ள பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

நோ்முகத் தோ்வுக்கான அனுமதிச்சீட்டை கடலூா் மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், மாவட்ட ஆள் சோ்ப்பு நிலைய தொலைபேசி எண் 04142-284001 தொடா்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT