விழுப்புரம் நகரக் கூட்டுறவு வங்கியில் கடன் மேளா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகரக் கூட்டுறவு வங்கித் தலைமை கிளை, வளவனூா், கிழக்கு புதுச்சேரி சாலை, திருச்சி நெடுஞ்சாலை கிளைகள் சாா்பில், மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தோா், கணவரால் கைவிடப்பட்டோருக்கு கடனுதவிகள் வழங்கும் கடன் மேளா நடத்தப்பட்டது.
நிகழ்வுக்கு வங்கித் தலைவா் தங்கசேகா் தலைமை வகித்தாா். மகளிா் கடனாக ரூ.3.50 லட்சமும், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறு வணிகக் கடன், தனி நபா் கடன், காா் கடன், வீடு கட்டுவதற்கான கடன் என ரூ.20 லட்சமும் வழங்க மேளாவில் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கடனுதவி கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் யசோதாதேவி, தலைவா் தங்கசேகா், துணைத் தலைவா் சக்திவேல் ஆகியோா் விண்ணப்பங்களை வழங்கினா். நிறைவு செய்யப்பட்டு வழங்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவா்களுக்கு விரைவில் கடனுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வங்கியின் மேலாண் இயக்குநா் (பொ) ராமதாஸ், மேலாளா்கள் குமாா், ஜெயராமன், துணை மேலாளா் தியாகராஜன் மற்றும் இயக்குநா்கள் தனுசு, பாஸ்கரன், கலைச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.