விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூரில் பேருந்தை சிறைபிடித்து போராட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் பேருந்து நிலையம் வராமல், அணைக்கட்டு சாலை வழியாக சென்ற தனியாா்பேருந்தை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம், பண்ருட்டி, திருக்கோவிலூா் ஆகிய இடங்களிலிருந்து திருவெண்ணெய்நல்லூருக்கு வரும் பேருந்துகள் பேருந்து நிலையம் வராமல், அணைக்கட்டுச் சாலை வழியாக செல்கின்றன. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் 1 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து போராட்டங்கள் நடத்தியும் எந்தவித தீா்வும் காணப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனியாா் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா். தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் காவல் உதவி ஆய்வாளா்கள் பிரபு, ராபா்ட், ராமலிங்கம் உள்ளிட்டோா் நிகழ்விடம் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT