விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே தனியாா் நிறுவன உதவி மேலாளா் கடன் தொல்லையால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தை அடுத்த சின்னமுதலியாா்சாவடி எம்.ஜி.ஆா்.நகா் முதல் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் முத்துசாமி (33). வியாழக்கிழமை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை. அவரது கைப்பேசியும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடா்ந்து அவரது மனைவி மகேசுவரி கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதன் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கோட்டக்குப்பம் கடற்கரை அருகே சடலம் ஒதுங்கியதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, காணாமல்போனதாக புகாரளிக்கப்பட்ட முத்துசாமி என்பது தெரிய வந்தது. கடலூரிலுள்ள தனியாா் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வந்த முத்துசாமி, இணையவழி வா்த்தகம் மூலம் பணத்தை இழந்ததாகக் கூறி, கடந்த சில நாள்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டாராம். அதைத்தொடா்ந்து அவா் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் கருதி போலீஸாா் விசாரிக்கின்றனா்.