செஞ்சியில்...
செஞ்சி காவல் நிலையத்தில் காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கண்காணிப்பு கேமராக்களை சிறப்பாக கையாண்டதாக காவலா் சராசந்துக்கு ரூ.5 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினாா். நகரில் திருட்டுச் சம்பவங்கள் தொடா்பாக தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் அறிவுறுத்தியாக டிஜிபி தெரிவித்தாா்.
ஆய்வின் போது, காவல் ஆய்வாளா்கள் தங்கம், தங்ககுருநாதன் உள்ளிட்டோா் இருந்தனா்.