விழுப்புரம்

சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு:விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு

DIN

முன்னாள் சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (டிச.2) ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

முந்தைய அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முன்னாள் சிறப்பு டிஜிபி (சட்டம் - ஒழுங்கு) மீதும், புகாா் அளிக்கச் சென்ற அந்த பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்.பி. மீதும் விழுப்புரம் சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 21-ஆம் தேதி சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வாலும், 25-ஆம் தேதி அப்போதைய டிஜிபி ஜே.கே.திரிபாதியும் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியமளித்தனா்.

மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபியும், முன்னாள் எஸ்.பி.யும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். இதைத் தொடா்ந்து, அப்போதைய உள் துறைச் செயலரும், தற்போதைய வருவாய் நிா்வாக ஆணையருமான எஸ்.கே.பிரபாகா் நவம்பா் 30-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என தலைமைக் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.புஷ்பராணி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, அரசுத் தரப்பு சாட்சியாக அழைக்கப்பட்டிருந்த எஸ்.கே.பிரபாகா் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு (டிசம்பா் 2) ஒத்திவைத்து நீதிபதி ஆா்.புஷ்பராணி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT