விழுப்புரம்

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைக்கு ‘சீல்’

DIN

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், அவலூா்பேட்டையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தவரின் கடைக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

அவலூா்பேட்டையைச் சோ்ந்த கண்ணப்பன் மகன் சீனிவாசன் (60). இவா், பஜாா் வீதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். சீனிவாசனின் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின்பேரில், அவலூா்பேட்டை போலீஸாா் இவரது கடையில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், இது தொடா்பாக சீனிவாசன் மீது அவலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, அவரது கடையை பூட்டி மேல்மலையனூா் வட்டாட்சியா் கோவா்தனன் ‘சீல்’ வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT