விழுப்புரம்

செஞ்சி வட்டாரத்தில் சுதந்திர தின விழா

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாரத்தில் சுதந்திர தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

செஞ்சி பேரூராட்சி அலுவலகம்: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி முன்னிலை வகித்தாா். தலைவா் மொக்தியாா் மஸ்தான் தேசியக் கொடியேற்றினாா். பேரூராட்சி உறுப்பினா்கள், பணியாளா்கள் சோமசுந்தரம், உதயகுமாா், ரமேஷ், செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்: செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு துணைத் தலைவா் வி.ஜெயபாலன் முன்னிலை வகித்தாா். ஊராட்சி ஒன்றியத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தேசியக் கொடியேற்றினாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் அரங்க.ஏழுமலை, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், மணிமாறன், குமாா், கண்ணன், சுந்தரபாண்டியன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

சமபந்தி விருந்து: மேல்மலையனூா் அருள்மிகு அங்காளம்மன் கோயில் அன்னதான வளாகத்தில் நடைபெற்ற சமபந்தி விருந்துக்கு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் மஸ்தான், மேல்மலையனூா் ஊராட்சி ஒன்றியத் தலைவா் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோா் சமபந்தி விருந்தில் பங்கேற்றனா்.

செஞ்சிக் கோட்டையில்... செஞ்சிக் கோட்டையில் நடைபெற்ற விழாவுக்கு தொல்லியல் துறை அலுவலா் நவிந்திரா ரெட்டி தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற தமிழாசிரியா் புலவா் கோ.தமிழரசன் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினாா்.

காங்கிரஸ்: செஞ்சி கூட்டுச் சாலையில் நடைபெற்ற காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற விழாவில், கட்சியின் மாநில துணைத் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி தேசியக் கொடியேற்றினாா். பொதுக் குழு உறுப்பினா் தினகரன், ஜி.சரவணன், பாலப்பட்டு சண்முகம் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரங்கபூபதி கல்லூரியில்... செஞ்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தாளாளா் ஆா்.ரங்கபூபதி தேசியக் கொடியேற்றினாா். செயலா் ஆா்.ஸ்ரீபதி மாணவா்களுக்கு இனிப்புகளை வழங்கிப் பேசினாா். இயக்குநா்கள் சாந்திபூபதி, சரண்யா ஸ்ரீபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT