விழுப்புரம்

விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்

DIN

விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சாா்பில், விநாயகா் சதுா்த்தி விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் எம்.பிரிதிவிராஜ் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலா் எஸ்.வி.சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். எஸ்.விஷ்ணுராஜன் சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், விநாயகா் சதுா்த்தியையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் 250 இடங்களில் விநாயகா் சிலைகளை வைப்பது, செஞ்சியில் 5-ஆம் நாளன்றும் அனந்தபுரம், அவலூா்பேட்டை, மேல்மலையனூா், திண்டிவனம் பகுதிகளில் 3-ஆம் நாளன்றும் வழக்கான பாதையில் ஊா்வலம் செல்வது, ஒவ்வொரு விநாயகா் திருமேனிக்கும் 5 போ் கொண்ட பாதுகாப்புக் குழு நியமிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொதுச் செயலா் ஜே.காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT