விழுப்புரம் மாவட்டம், மேல்லையனூா் அங்காளம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் தோ்தல் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூா் கோயில் உதவி ஆணையா் ஜீவானந்தம், திருவண்ணாமலை கோயில் உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்தத் தோ்தலில் புதிய அறங்காவலா் குழுத் தலைவராக வ.சந்தானம்பூசாரி ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். இதில், திருக்கோயில் ஊழியா்கள், பணியாளா்கள், அறங்காவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.