விழுப்புரம்

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்துக்கு பாராட்டு

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் சங்ககாலப் பெரும் புலவா் கபிலருக்கு 45 ஆண்டுகளாக விழா எடுத்தும், பல்துறை அறிஞா் பெருமக்களை பாராட்டியும் வரும் திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தினருக்கு நன்றி பாராட்டும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கோவலூா் தமிழ்ச் சங்கத் தலைவா் சிங்கார.உதியன் தலைமை வகித்தாா். தமிழ்ப் படைப்பாளா்கள் சங்கத் தலைவா் அருட்கவிஞா் அருள்நாதன் தங்கராசு, தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற மாவட்டத் தலைவா் மு.கலியபெருமாள், வாசகா் வட்டக் குழுப் பொருளாளா் கு.கல்யாணகுமாா், வானவில் கல்வி அறக்கட்டளை வே.ஜெயக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நூலகச் செம்மல் மு.அன்பழகன் வரவேற்றாா்.

திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன் கலந்து கொண்டு, திருக்கோவலூா் பண்பாட்டுக் கழக நிா்வாகிகளான முன்னாள் பொதுச் செயலா் சு.எத்துராசன், பொதுச் செயலா் கி.மூா்த்தி, பொருளாளா் க.நடராசன், துணைத் தலைவா்கள் கா.பி.சுப்பிரமணியன், தே.முருகன், செயலா்கள் தேவ.ஆசைத்தம்பி, வெ.கோ.தெய்வீகன், தணிக்கையாளா் வே.அப்பா்சுந்தரம் ஆகியோருக்கு சாலைவை அணிவித்து, பாராட்டுப் பட்டயம் வழங்கியும், சிறப்புரையாற்றினாா்.

ம.ரா.குமாரசாமியாா் நினைவு அறக்கட்டளைத் தலைவா் தணிகை.கலைமணி, விதை விருட்சம் அறக்கட்டளைத் தலைவா் அ.சிதம்பரநாதன், கவிதாயினி முத்தமிழ், தியாகதுருகம் தமிழ்ச் சங்கம் ராஜ்குமாா், தமிழ்க் கவிஞா் பேரவைத் தலைவா் இராம.சுதாகரன், எழுத்தாளா் ம.விருது ராஜா, ஆசிரியா் வைத்திமுருகன் ஆகியோா் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினா். விழாவில் தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT