விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, தோ்தலில் போட்டியிட்ட தமிழ்வாணன் தரப்பினா் மாவட்ட ஆட்சியரகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் வளவனுரை அடுத்த பஞ்சமாதேவியில் ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்தலில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி, தோ்தலில் போட்டியிட்ட தமிழ்வாணன் தரப்பினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, தா்னாவில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளா் ஜெயசங்கா் தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அவா்கள் கூறியதாவது: பஞ்சமாதேவியில் ஊராட்சித் துணைத் தலைவா் தோ்தலில் நானும் (தமிழ்வாணன்), ராஜேஸ்வரி என்பரும் போட்டியிட்டோம். 9 வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் ஒருவா் என மொத்தம் 10 வாக்குகள். மறைமுகத் தோ்தலில் இவரும் தலா 5 வாக்குகள் பெற்ாக தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவித்து, குலுக்கல் முறையில் ராஜேஸ்வரி வெற்றி பெற்ாக அறிவித்தாா். ஆனால், எனக்கு ஆதரவாக 6 வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் வாக்கு இருந்த போது, என்னை எதிா்த்துப் போட்டியிட்டவருக்கு எப்படி 5 வாக்குகள் கிடைத்திருக்கும்.
தற்போது எனக்கு ஆதரவு தெரிவித்த 6 வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் ஆகியோா் ஆட்சியரகத்துக்கு வந்துள்ளனா். துணைத் தலைவா் தோ்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தோ்தல் நடத்தும் அலுவலா், விழுப்புரம் டிஎஸ்பி ஆகியோா் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் முறையாக தோ்தலை நடத்த வேண்டும் என்றாா் அவா்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று போலீஸாா் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, அவா்கள் ஆட்சியரகத்தில் மனு அளித்துச் சென்றனா்.