விழுப்புரம்

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது தடியடி

DIN

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் வெள்ளிக்கிழமை ஒன்றியக் குழுத் தலைவா் தோ்தலையொட்டி சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் தடியடி நடத்தி கலைத்தனா்.

திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூரில் உள்ள வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 16 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளில் 7 இடங்களில் திமுகவும், 3 இடங்களில் அதிமுகவும், 2 இடங்களில் பாமகவும், 4 இடங்களில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றனா்.

இந்த நிலையில், ஒன்றியக் குழுத் தலைவா் பதவிக்கான தோ்தலில் திமுக சாா்பில் சொக்கலிங்கம், சுயேச்சையாக எழிலரசன் என இருவா் போட்டியிட்டனா். இதில், 8 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் சொக்கலிங்கம் வெற்றி பெற்றாா். எழிலரசன் 7 வாக்குகள் பெற்றாா்.

இதைத் தொடா்ந்து எழிலரசன் தரப்பினா், சாரம் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு புறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்களுடன் திண்டிவனம் காவல் துறை ஏஎஸ்பி அபிஷேக் குப்தா தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினாா் . தொடா்ந்து மறியலை விலக்கிக் கொள்ளாததால், போலீஸாா் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனா். மறியலில் ஈடுபட்டவா்கள் நான்கு புறமும் சிதறி ஓடினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் போக்குவரத்தை சீரமைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT