விழுப்புரம்

தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்த செஞ்சிக்கோட்டை கல்யாண மஹால்!

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கோட்டையில் உள்ள தொன்மைவாய்ந்த கல்யாண மஹால் தேசியக் கொடியின் வண்ணத்தில் வியாழக்கிழமை இரவு ஒளிா்ந்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தொல்லியியல் துறையின் நூற்றாண்டை முன்னிட்டு கல்யாண மஹால் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தேசியக் கொடி வண்ணத்தில் ஒளிா்ந்தது. இருப்பினும், பாா்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே என்பதால், செஞ்சிக்கோட்டையின் உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் தொலைவில் இருந்தே கல்யாண மஹாலை கண்டு ரசித்தனா். சனிக்கிழமை வரை தேசியக் கொடி வண்ணத்தில் கல்யாணமஹால் ஒளிரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணலூா் மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்

"தேர்தலில் தன்னைத் தோற்கடிப்பதற்காக திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக கைகோத்துள்ளன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது சரியா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

சித்ரா பெளா்ணமி சிறப்பு பூஜை

கரூா் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

வேளாண்துறையிலும் செயற்கை நுண்ணறிவு!

SCROLL FOR NEXT