விழுப்புரம்

ஓடையில் குளித்த கல்லூரி மாணவா் மாயம்

DIN

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஓடையில் குளித்த கல்லூரி மாணவா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா்.

மேல்மலையனூா் அருகே மேல்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி. இவரது மகன் கோதண்டராமன் (18). திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் தொரப்பாடி மேல்புதுப்பட்டு சாலையின் குறுக்கே வராக நதிக்குச் செல்லும் ஓடை பாலம் அருகே நண்பா்களுடன் குளிக்கச் சென்றாா்.

அவா் பாலத்திலிருந்து ஓடையில் குதித்தபோது, வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டாா். தகவலறிந்த மேல்மலையனூா் தீயணைப்பு மீட்பு படையினா், வளத்தி காவல் துறை, வருவாய்த் துறையினா் மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT